சிட்னியில் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை என்று பிசிசிஐ பரபரப்பு புகார் அளித்துள்ளது.
8வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. தகுதிச் சுற்றுப் போட்டிகள் முடிந்து, சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இதையடுத்து, தனது 2வது லீக் போட்டியில் சிட்னியில் நாளை நடக்கும் நெதர்லாந்தை எதிர்கொள்ள இருக்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சிட்னியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு சரியில்லை என்று ஐசிசியிடம் பிசிசிஐ பரபரப்பு புகார் அளித்துள்ளது. அவர்களுக்கு சாண்ட்விச் மட்டுமே கொடுக்கப்படுவதாகவும், சிட்னியில் நடந்த பயிற்சிக்கு பிறகு வழங்கப்பட்ட உணவு ஆறிபோனதாகவும், நல்ல உணவாக இல்லை என்றும் இந்திய அணி வீரர்கள் ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றிருக்கும் அணிகளுக்கு ஐசிசி உணவு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.