ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிகள் நாளை தொடங்குகிறது. சூப்பர்-12 போட்டிகள் நிறைவு பெற்று நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.
முதல் அரையிறுதிப்போட்டியில் நாளை நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் சிட்னியில் விளையாடுகின்றன. இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நவ-10 ஆம் தேதி அடிலெய்டில் விளையாடுகின்றன.
இந்திய அணியை பொறுத்தவரை இந்த உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி நல்ல பார்மில் இருந்து வருகிறார், இந்த தொடரில் அதிக (246) ரன்கள் குவித்த வீரராக கோலி திகழ்கிறார். இதனால் அரையிறுதி போட்டியில் கோலியின் விக்கெட்டை கைப்பற்ற இங்கிலாந்து வீரர்கள் அதிக முனைப்பு காட்டுவார்கள்.
இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து போட்டியின்போது விராட் கோலி விடுமுறை எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என அந்த அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் வேடிக்கையான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், கோலி பார்மில் இல்லாத நேரத்தில் நான் அவரை ஆதரித்தேன். அவர் ரசிகர்களை மகிழ்விக்க தெரிந்தவர். அவர் விளையாடும்போது அவருக்கு ரசிகர்கள் கூட்டம் தேவை.
அவருக்கு உற்சாகம் தேவை. ஆனால் சில வருடங்களாக அவருக்கு அது இல்லாததால் அவர் வழி தவறிவிட்டார். ஆனால் தற்போது ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. ஆஸ்திரேலியா டி20 கிரிக்கெட் விளையாடுவதற்கான சிறந்த இடங்களில் ஒன்று.
இதனால் கோலி மீண்டும் பார்முக்கு வந்துள்ளார். நெருங்கிய நண்பராக, நான் அவருக்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் அரையிறுதியில் விராட் ஒரு நாள் விடுமுறை எடுக்க வேண்டும். விராட் கோலி நன்றாக விளையாடும்போது, அவரைச் சுற்றி மற்ற வீரர்களும் சிறப்பாக செயல்படத் தொடங்குகின்றனர், என கூறியுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.