ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றுள்ளது.
இன்று மதியம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா (67) அபாரமாக ஆடினார். சஹா (25), மில்லர் (27) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தனர். எஞ்சிய வீரர்கள் சொதப்பியதால், அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது.
இதைத் தொடர்ந்து, 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டழந்தனர். அந்த அணியின் ரிங்கு சிங் 35 ரன்கள் எடுத்தார். கடைசியில் ரஸல் மட்டுமே வெற்றிக்காக போராடினார். அவர் 48 ரன்களில் ஆட்டமிழந்ததால், கொல்கத்தா அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதன்மூலம், புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தானை பின்னுக்குத் தள்ளி குஜராத் மீண்டும் முதலிடத்தை பிடித்தது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.