ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை – லக்னோ அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, களமிறங்கிய லக்னோ அணி சென்னை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுக்களை இழந்தது. அதிரடி வீரர் மேயர்ஸ் (14), வோரா (10), குர்னல் பாண்டியா (0), ஸ்டொயினிஸ் (6), கரன் சர்மா (9) என அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். அந்த 44 ரன்னுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகிறது.
இதனிடையே, 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிகோல்ஸ் பூரன், பதோனி சிறப்பாக ஆடி ரன்களை குவித்து வருகிறது.
முன்னதாக, டாஸ் போடும் போது சென்னை அணியின் கேப்டன் தோனியிடம், இந்த ஐபிஎல் தொடருடன் நீங்கள் ஓய்வு பெறுகிறீர்களா..? என வர்ணனையாளர் டேனி மாரிசன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு சிரித்தபடி பதிலளித்த தோனி, “இது எனது கடைசி சீசன் என நீங்கள்தான் முடிவு செய்துள்ளீர்கள், நான் அல்ல,” எனக் கூறினார். இதனை கேட்ட மாரிசன், அடுத்த சீசனிலும் தோனி விளையாடுவார் என்று ரசிகர்களை நோக்கி கூறினார். இதனால், மைதானத்தில் இருந்த தோனி ரசிகர்கள், பலத்த கரகோஷத்தை எழுப்பினர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.