ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பையில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு, வழக்கம் போல பட்லர் அதிரடி காட்டினார். மற்ற வீரர்கள் ஓரளவுக்கு மட்டுமே தாக்கு பிடித்த நிலையில், அவர் 67 ரன்கள் குவித்து அணியின் ரன்குவிப்புக்கு காரணமாக இருந்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்தது.
இதைத் தொடர்ந்து, களமிறங்கிய மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா (2) ஏமாற்றம் அளித்தாலும், இஷான் கிஷான் 26), சூர்ய குமார் யாதவ் (51), திலக் வர்மா (35) என அடுத்தடுத்து சிறப்பாக விளையாட, மும்பை அணிக்கு கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில் டேனியல் சாம்ஸ் சிக்சர் அடித்து மும்பை அணிக்கு வெற்றி தேடி கொடுத்தார்.
இதன்மூலம் 8 தொடர் தோல்விக்கு மும்பை அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது மும்பை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.