ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு விக்கெட்டுக்கள் ஒருபுறம் சரிந்தாலும், மார்ஷ் 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து, எந்த ஆஸ்திரேலிய பேட்டர்களும் தாக்குபிடிக்கவில்லை. ஸ்மித் (22), இங்கிலீஷ் (26), லபுஷக்னே (15), க்ரீன்(12) ஆகியோரை சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், ஆஸ்திரேலியா அணி 188 ரன்னுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில், ஷமி, சிராஜ் தலா 3 விக்கெட்டையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து, 189 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இஷான் கிஷான் (3), விராட் கோலி (4), சூர்யகுமார் யாதவ் (0), கில் (20) என அடுத்தடுத்து விக்கெட்டைக்களை இழந்தனர். 39 ரன்களுக்குள் இந்திய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியதால் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இதைத் தொடர்ந்து, கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்து ஓரளவுக்கு ரன் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 83 ரன்களை எட்டிய போது, ஹர்திக் (25) ஆட்டமிழந்தார்.
பின்னர், ஜடேஜா, கேஎல் ராகுல் இணை நிதானமாக ஆடி, அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். 40வது ஓவரின் கடைசி பந்தில் ஜடேஜா பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். ஜடேஜா (45), கேஎல் ராகுல் (75) கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
கடந்த சில போட்டிகளில் சொதப்பிய கேஎல் ராகுல் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்த நிலையில், தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஒன்மேன் ஆர்மியாக நின்று அணியை வெற்றி பெறச் செய்துள்ளார் கேஎல் ராகுல்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.