குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 29-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் – ராபின் உத்தப்பா களமிறங்கினார்கள்.
கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய உத்தப்பா, இந்த போட்டியில் 3 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய மொயின் அலி 1 ரன் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து களமிறங்கிய அம்பதி ராயுடு, ருதுராஜுடன் இணைந்து சிறப்பாக ஆடி வந்தனர். இருவரின் கூட்டணியில் அணியின் ஸ்கொர் உயர, 46 ரன்கள் எடுத்து அம்பதி ராயுடு தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைதொடர்ந்து சிவம் துபே களமிறங்க, அதிரடியாக ஆடிவந்த ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்துகளுக்கு 73 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து கேப்டன் ஜடேஜா களமிறங்க, 12 பந்துகளுக்கு 22 ரன்கள் அடித்தார்.
இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது குஜராத் டைட்டன்ஸ் அணி சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற 10 ஓவரில் 58 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது.
அதன் பின்னர் வந்த மில்லர் மற்றும் ரஷீத் கான் அதிரடியால் குஜராத் அணி ஸ்கோர் உயர்ந்தது. 20 பந்துகளில் 40 ரன்களை அடித்த பவுலர் ரஷித் கான் பிராவோ பந்தில் பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த ஜோசப் டக் அவுட் ஆனார்.
இறுதி ஓவரை மீண்டும் ஜோர்டன் வீச, 2வது பந்தில் சிக்ஸர் விளாசினார் மில்லர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.