ராஜஸ்தான் அணியின் ராஜாங்கம்…பேட்டிங், பவுலிங்கில் அசத்திய வீரர்கள் : சாஹல் சுழலில் சிக்கிய கொல்கத்தா போராடி தோல்வி!!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 30-வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. மும்பையில் பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்ய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் – தேவ்தத் படிக்கல் களமிறங்கினார்கள்.

தொடக்கம் முதலே ஜோஸ் பட்லர் சிறப்பாக அடிவர, மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த படிக்கல், 24 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன், பட்லருடன் இணைந்து சிறப்பாக ஆடிவந்தார். 19 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக ஆடிவந்த ஜோஸ் பட்லர், சதம் விளாசி, 103 ரன்கள் எடுத்து தந்து விக்கெட்டை இழந்தார். பின்னர் சிம்ரன் ஹெட்மயர் களமிறங்க, இவரின் அதிரடியான ஆட்டத்தால் ராஜஸ்தான் அணியின் ஸ்கொர் 200-ஐ கடந்தது.

இறுதியாக ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய கொலகத்தா அணியின் துவக்க வீரர் பிஞ்ச் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்,

ஆனால் சுனில் நரேன் டக் அவுட் ஆனார், பின்னர் வந்த கேப்டன் ஸ்ரோயாஷ் அதிரடியாக ஆடினார். ஒரு பக்கம் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 58 ரன் எடுத்த பிஞ்ச் 58 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

பின்னர் வந்த ராணா 18 ரன்னில் வெளியேற, சாஹலில் சுழலில் அடுத்தடுதத்து வீரர்கள் அவுட் ஆகினர். ஸ்ரேயாஷ் 85 ரன்கள் எடுத்திருந்த போது சாஹல் பந்தில் அவுட் ஆனார். ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை எடுத்து ஹாட் ட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த சாஹல்.

8 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்னில் தத்தளித்த கொல்கத்தா அணியை மீண்டும் உச்சத்துக்கு கொண்டு வந்தார் உமேஷ். வந்த வேகத்தில் சிக்ஸர் விளாசினார். ஆனால் மறுபுறம் ஜாக்சன் அவுட் ஆனார்.

இறுதியி 4 பந்துகளுக்கு 9 ரன் தேவையென்ற போது ஒரு ரன் வருண் எடுக்க, உமேஷ் யாதவ் அவுட் ஆனதால் ராஜஸ்தான் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

13 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

14 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

15 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

15 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

16 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

17 hours ago

This website uses cookies.