ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மோசமான சாதனையை படைத்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தில் உள்ளது. யார் பிளே ஆஃப்பிற்கு செல்வார்கள் என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரின் 49வது ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சும், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சும் விளையாடி வருகின்றன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் சென்னை பவுலர்களின் ஆதிக்கமே தலைதூக்கியுள்ளது. டாஸ் வென்று சென்னை பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், பேட் செய்து வரும் மும்பை விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகிறது.
கடந்த சில தினங்களாக பேட்டிங்கில் தடுமாறி வரும் ரோகித் சர்மா, இந்த முறை தொடக்க வீரராக களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக க்ரீன் களமிறங்கினார். ஆனால், இந்த முயற்சியும் மும்பைக்கு கைகொடுக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்களான க்ரீன் (6), இஷான் கிஷான் (7) என ஆட்டமிழந்தனர்.
இதைத்தொடர்ந்து, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா இந்த முறையும் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதன் மூலம், அதிகமுறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை அவர் பெற்றுள்ளார். இதுவரையில் அவர் 16 முறை ரன் எதுவுமின்றி வெளியேறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, தினேஷ் கார்த்திக், சுனில் நரேன், மந்தீப் சிங், ஆகியோர் 15 முறை டக் அவுட்டாகி அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
This website uses cookies.