நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து அணி தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் ஓரளவுக்கு இருந்தாலும், அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் சரிந்தன. ஆனால், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கில், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
இதன்மூலம், மிக இளவயதில் (23) இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக இஷாந்த் கிஷாந்த் 24 வயதிலும், ரோகித் சர்மா 26 வயதிலும் இந்த சாதனையை படைத்தனர்.
அதுமட்டுமில்லாமல், நியூசிலாந்துக்கு எதிராக இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் அடித்த அதிகபட்ச ஸ்கோரை (186 நாட்அவுட்) முறியடித்து, சுப்மன் கில் அசத்தியுள்ளார். மேலும், ஐதராபாத் மைதானத்தில் தனிமனித அதிகபட்ச ஸ்கோராக 186 ரன்களை சச்சின் டெண்டுல்கர் அடித்திருந்தார். அதனை தற்போது கில் முறியடித்துள்ளார்.
இறுதியில் கில் 208 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.