இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதின. அடிலெய்டில் இன்று நடந்து வரும் 2வது போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தார். கடந்த சில போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வந்த கேஎல் ராகுல், இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடினார். அவருடன் கோலியும் நின்று ஆடி ரன்களை குவித்தார். ராகுல் 50 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 30 ரன்னிலும் ஆட்டமிழந்தாலும், கோலி கடைசி வரை நின்று அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார்.
இதனால், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் சேர்த்தது. கோலி 64 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய லிட்டன் தாஸ், சாண்டோ இணை அதிரடியாக விளையாடியது. லிட்டன் தாஸ் 20 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதனால், வங்கதேச அணி பவர் பிளேவான 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்களை எடுத்தது.
7 ஓவர்கள் முடிவவில் 66 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஆட்டம் எப்போது தொடங்கப்படும் என்று தெரியாத நிலையில், வங்கதேசம் மற்றும் இந்திய ரசிகர்கள் பெரும் குழப்பத்திலும், அச்சத்திலும் இருந்து வருகின்றனர்.
தற்போது, பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, வங்கதேச அணிகள், இதுவரை 3 போட்டிகள் விளையாடியுள்ளன. அதில், 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகளைப் பெற்று 2 மற்றும் 3வது இடத்தில் உள்ளது. இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் அணி, முதலிடத்தை பிடிக்கும். மேலும், அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இன்னும உறுதி செய்யும்.
இப்படியிருக்கையில், தற்போது ஆட்டம் ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்தப்பட்டால், வெற்றி, தோல்வியை இரு அணி வீரர்களும் விளையாடி தீர்மானிப்பார்கள். ஒருவேளை, இத்துடன் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டால், அது இந்திய அணிக்கு பாதகமாகிவிடும்.
அதாவது, டக்வொர்த் லூயிஷ் முறைப்படி, 7 ஓவர்களில் வங்கதேச அணி 49 ரன்கள் எடுத்தாக வேண்டும். ஆனால், தற்போது, 66 ரன்கள் எடுத்திருப்பதால், 17 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. எனவே, மழை நின்று ஆட்டம் தொடங்க வேண்டும் என்றே இந்திய ரசிகர்கள் கடவுளை வேண்டிக் கொண்டிருப்பார்கள் என்பதே நிஜம்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
This website uses cookies.