இறுதிப் போட்டியின் போது மழை வந்தால் யாருக்கு சாதகம்…? இந்தியாவுக்கு காத்திருக்கும் Advantage..!!

Author: Babu Lakshmanan
10 November 2022, 11:00 am
Quick Share

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மழையால் தடைபட்டால், கோப்பை யாருக்கு என்பது குறித்த புதிய விதிமுறைகளை கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து பாகிஸ்தான் அணி 3வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டது. இன்று நடக்கும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, 2வது அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

ஒருவேளை இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் பட்சத்தில் இரு அணிகளும் 10 ஓவர்களுக்கு மேல் விளையாடி இருந்தால் மட்டுமே, வெற்றியாளர் அறிவிக்கப்படும். இல்லையெனில் ஆட்டம் ரத்து செய்யப்படும். குறிப்பாக, ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டாலும், இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும்.

சூப்பர் 12 சுற்றின் பிரிவில் முதலிடம் பிடித்ததால் இந்திய அணிக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.

அதேபோல, ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதி ஆட்டம் மழையால் தடைபட்டால், இரு அணிகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்பது ஐசிசியின் புதிய விதிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த புதிய விதிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் கடும் எதிர்ப்பும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

பொதுவாக, அரையிறுதி, இறுதிப் போட்டி உள்ளிட்ட முக்கிய ஆட்டங்களுக்கு ரிசர்வ் டே அறிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், அதனை மாற்றி கோப்பையை பிரித்து வழங்குவது சரியாக இருக்காது என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 444

0

0