36 ஆண்டு சாதனை முடிவுக்கு வந்தது…. விஸ்வநாதன் ஆனந்த்தை பின்னுக்கு தள்ளிய 17 வயது வீரர்!!!

36 ஆண்டு சாதனை முடிவுக்கு வந்தது…. விஸ்வநாதன் ஆனந்த்தை பின்னுக்கு தள்ளிய 17 வயது வீரர்!!!

ஃபிடே அமைப்பு சார்பாக நடத்தப்பட்டு வரும் செஸ் உலகக்கோப்பை தொடர் அஸர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இதன் 2வது சுற்றுப் போட்டியில் 17வது வயதேயான இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், அஸர்பைஜானின் மிஸ்ரடின் இஸ்கந்த்ரோவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 44வது நகர்த்தலின் போது குகேஷ் வெற்றிபெற்றார்.

இதனை சர்வதேச செஸ் சம்மேளனத்தின் லைவ் ரேட்டிங்கில் குகேஷ் 2755.9 புள்ளிகளுடன் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்தார். அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் செஸ் முகமாக உள்ள விஸ்வநாதன் ஆனந்த 2754.0 புள்ளிகளுடன் 10வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இது இந்திய விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் 1986ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பிரவீன் தீப்சேவை விட அதிக புள்ளிகள் பெற்று விஸ்வநாதன் ஆனந்த சாதனை படைத்தார். அன்று முதல் இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக விஸ்வநாதன் ஆனந்த இருந்து வந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 17 வயதேயான குகேஷ், விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளியிருக்கிறார்.

ஃபிடே அமைப்பின் தரவரிசை பட்டியல் செப்.1ஆம் தேதியன்று வெளியிடப்படும். அதுவரையில் விஸ்வநாதன் ஆனந்தை விடவும் குகேஷ் முன்னிலையில் இருந்தால், இந்தியாவின் நம்பர் 1 வீரராக குகேஷ் சாதனை படைப்பார். அதேபோல் தரவரிசையில் மாற்றங்கள் நடக்க வாய்ப்பில்லை என்றே ஃபிடே அமைப்பு சார்பாக கூறப்படுகிறது.

விஸ்வநாதன் ஆனந்த் குருவாக கொண்டுள்ள குகேஷ், விஸ்வநாதன் ஆனந்தையே தரவரிஉசையில் முந்திருயிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆசிரியரை மிஞ்சிய மாணவன் என்று பலரும் குகேஷிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் கடந்த ஆண்டு நடைபெற்ற எயிம்செஸ் ரேபிட் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி குகேஷ் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.