உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் தமிழக வீராங்களை இளவேனில் தங்கம் வென்று அசத்தல்… குவியும் வாழ்த்துக்கள்!!
பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில். உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி சார்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன் கலந்து கொண்டார். சிறப்பான முறையில் திறமையை வெளிப்படுத்திய இளவேனில் வாலறிவன் 252.2 புள்ளிகளை பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒகேன் முல்லர் 251.9 புள்ளிகள் உடன் வெளி பதக்கத்தை பெற்றார். சீனாவின் ஜாங் ஜியாலேவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. இதேபோன்று ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் சந்தீப் சிங் 628.2 புள்ளிகளை பெற்று 14 வது இடத்தை பிடித்துள்ளார்.
சர்வதேச அரங்கில் இளவேனில் வாலறிவன் பெறும் 2-ஆவது தங்கப்பதக்கம் இதுவாகும். இதையொட்டி அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.