சென்னை : பெங்களூரூவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் அம்பயரால் கடுப்பான குஜராத் அணியின் வீரர் மேத்யூ வேட் செய்த செயல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இன்றைய லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியும், குஜராத் அணியும் விளையாடின. இதில், புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் பெங்களூரூ அணி, இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றால் தான் பிளே ஆப்பிற்கு செல்ல முடியும் என்ற நிலையில் விளையாடி வருகிறது. இதனால் இந்த போட்டி ஆரம்பத்திலிருந்தே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த குஜராத் அணிக்கு தொடக்க வீரர் கில், மூன்றாவது ஓவரிலேயே ஒரு ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். பின்பு களமிறங்கிய மேத்யூ வேட், 13 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்சர் உட்பட 16 ரன்களை அடித்திருந்தார். மேக்ஸ்வெல் வீசிய பவர் பிளேவின் கடைசி ஓவரில், மேத்யூ வேடிற்கு எல்பிடபிள்யூ அப்பீல் கேட்கப்பட்டது. சிறிது நேரம் யோசித்த அம்பயரும் இறுதியில் அவுட் கொடுத்தார். ஆனால், பந்து பேட்டில் பட்டு கால் பேடில் பட்டது தெரிய வந்தது. இதனால், உடனடியாக வேட் டி.ஆர்.எஸ். அப்பீல் செய்தார்.
ஆனால், அதில் பந்து பேட்டிற்கு மிக அருகில் திரும்பியது தெரிய வந்தது. இதனால், பேட்டில் பட்டது போல தான் தெரிந்தது. ஆனால், பெரிதாக ஸ்பார்க் காட்டாததால் மூன்றாவது அம்பயரும் அவுட் கொடுத்தார்.
இதனால் கடுப்பான மேத்யூ வேட் டிரெஸ்சிங் ரூமிற்கு சென்று பேட்டினை வேகமாக தரையில் தூக்கி எறிந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அம்பயர் அவுட் கொடுத்ததும், விரக்தி ஆனா மேத்யூ வேடிடம் விராட் கோலி மைதானத்திலேயே தட்டிக் கொடுத்து அனுப்பி வைத்திருந்தார். கோலியின் இந்த செயலும் பாராட்டுக்குள்ளானது. இந்த வருட ஐபிஎல் போட்டியில் நடுவரின் தவறான முடிவுகள் பல முறை அரங்கேறியுள்ளது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.