தலையில் பந்து பலமாக தாக்கி சுருண்டு விழுந்த வெங்கடேஷ் ஐயர் : மைதானத்துக்குள் வந்த ஆம்புலன்ஸ்… துலீப் கோப்பை போட்டியில் பரபரப்பு..!!

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கு மண்டலம் அணிகளும், மத்திய மண்டல அணிகளும் கோவையில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற மத்திய மண்டல அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மேற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 257 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதை தொடர்ந்து இன்று நடந்த 2வது நாள் ஆட்டத்தில், மத்திய மண்டல அணி பேட்டிங்கில் தடுமாறியது.

அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந் வெங்கடேஷ் ஐயர் 6 ரன்கள் எடுத்திருந்த போது, காஜா என்ற வீரர் பந்தை பில்டிங் செய்யும் போது எறிந்தார். அது, வெங்கடேஷ் ஐயரின் பின் தலையில் பட்டது. இதனால் வலியால் துடித்தார்.

இதனையடுத்து மைதானத்திற்குள் உடனடியாக ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. இதனால், அங்கு இருந்த ரசிகர்கள் பதறி போயினர். எனினும் வெங்கடேஷ் ஐயர், அவராகவே எழுந்து நடந்து மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக வெங்கடேஷ் ஐயர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்ததை அடுத்து அவர் மீண்டும் மைதானத்திற்கு வந்து பேட்டிங்கை தொடங்கினார்.

இருப்பினும் அவர் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். மத்திய மண்டல அணி முதல் இன்னிங்சில் 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.

2-வது நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கு மண்டல அணி 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்துள்ளது. மத்திய மண்டல அணியை விட மேற்கு மண்டல அணி 259 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

21 minutes ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

45 minutes ago

ஏடிஜிபி வழக்கில் கறார் காட்டிய உச்சநீதிமன்றம்? உத்தரவுக்கு பணிந்த தமிழக அரசு?

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…

2 hours ago

இனி கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை? காவல் ஆணையர் திடீர் உத்தரவு…

நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…

3 hours ago

ராமாபுரம் மெட்ரோ விபத்து; கோடி ரூபாய் அபராதம்; அதிரடி காட்டிய நிர்வாகம்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…

3 hours ago

கமல்ஹாசனுக்கு பணிந்த கர்நாடக அரசு? தக் லைஃப்க்கு பச்சை கொடி!

“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…

5 hours ago

This website uses cookies.