ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆட்டம், பாட்டம் என களைநிகழ்ச்சிகளுடன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை – குஜராத் அணிகள் விளையாடின. அகமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்க வீரர்கள், கான்வே (1), மொயின் அலி (23), ஸ்டோக்ஸ் (7), ராயுடு (12) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். மறுமுனையில் அதிரடியாக ஆடிய கெயிக்வாட் 92 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் அவர் 9 சிக்சர்களை பறக்க விட்டு அசத்தினார். இறுதியில் துபே (18), தோனி (14) ஓரளவுக்கு கைகொடுக்க சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது.
179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு சாஹா, கில் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். சாஹா 25 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், வில்லியம்சனுக்கு பதிலாக இம்பேக்ட் வீரராக சாய் சுதர்சன் களமிறங்கினார். சாய் சுதர்சன் (22), ஹர்திக் பாண்டியா (8) என ஏமாற்றம் அளித்தாலும், மறுமுனையில் அதிரடியாக ஆடிய கில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6 பந்துகளுக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட போது, திவேதியா சிக்சர் மற்றும் பவுண்டரியை பறக்க விட்டு, குஜராத் அணியை வெற்றி பெறச் செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு சாம்பியனான குஜராத் அணி, 2023 ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இதுவரை 10 போட்டிகளை சேஸிங் விளையாடிய குஜராத் அணி 9ல் வெற்றி பெற்றுள்ளது. அதில் 8 ஆட்டங்களில் கடைசி ஓவரில் வெற்றியை ருசித்துள்ளது.
சேஸிங்கில் குஜராத் அணி வலிமையாக இருப்பதனால் தான் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.