குஜராத்-மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 35வது லீக் ஆட்டம் அகமதாபாத்தில் இன்று நடந்து வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா, பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து, முதலில் குஜராத் அணி விளையாடியது. ஆரம்பம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தவித்தது குஜராத்.
ஓபனரும் விக்கெட் கீப்பருமான ரித்திமான் சாஹா 4 ரன்களில் அர்ஜுன் டெண்டுல்கர் ஓவரில் நடைடையக் கட்டினார்.
ஷுப்மன் கில் மட்டும் நிதானமாக விளையாடிய அரை சதம் விளாசி ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 13 ரன்களிலும், விஜய் சங்கர் 19 ரன்களிலும் ஏமாற்றினர். டேவிட் மில்லர், அபினவ் மனோகர் நின்று விளையாடினர். அபினவ் அசத்தலாக சிக்ஸர்களை விளாசத் தொடங்கினார். ஆனால் அவரும் 42 ரன்களில் கேட்ச் ஆனார். அரை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மில்லர் கடைசி ஓவரில் 46 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் ஆகி நடையைக் கட்டினார்.
மும்பை சார்பில் அதிகபட்சமாக பியூஷ் சாவ்லா 4 ஓவர்களை வீசி 2 விக்கெட்டுகளையும் குமார் கார்த்திகேயா 4 ஓவர்கள் வீசி 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இவ்வாறாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 207 ரன்களை எடுத்தது. 120 பந்துகளில் 208 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது.
இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம் முதலே குஜராத் வீரர்கள் ஆக்ரோஷமாக பந்து வீசினர். முகமது ஷமி வீசிய முதல் ஓவரில் வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே மும்பை எடுத்தது. இரண்டாவது ஓவரை கேப்டன் ஹர்திக் வீச, ரோகித் ஷர்மா அவர் கையில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
தொடர்ந்து இஷான் மற்றும் க்ரீன் ஆகியோர் சீரான ரன்களை எடுத்து வருகின்றனர். 5 ஓவர் முவில் ஒரு விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 25 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.