நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது.
நடப்பு 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டன. 4வது இடத்திற்கு நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது.
இதில் கடந்த சில போட்டிகளின் முடிவுகளால் நியூசிலாந்து அணிக்கே 99 சதவீத வாய்ப்புகள் இருந்தது. ஏதேனும் அதிர்ஷ்டம் நிகழ்ந்தால் பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு அரையிறுதி வாய்ப்பு என்றிருந்தது.
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்ததால் அந்த அணி உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
அதேவேளையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு சற்று சவால் நிறைந்ததாகும். அதாவது, 300 ரன்களை இலக்காக நிர்ணயித்தால் இங்கிலாந்தை 13 ரன்களுக்கும், 400 ரன்களை இலக்காக நிர்ணயித்தால் 122 ரன்களுக்குள்ளும் சுருட்ட வேண்டும். மாறாக இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தால் அந்த அணி நிர்ணயிக்கும் இலக்கை 3 ஓவர்களுக்குள் அடிக்க வேண்டும் என்ற சவால் இருந்தது.
இந்த நிழலில், பாகிஸ்தான் டாஸ் ஜெயித்து பேட் செய்தால் மட்டுமே, அரையிறுதியை ஒரு சதவீதமாவது நினைத்து பார்க்க முடியும் என்றிருந்தது. அப்படியிருக்கையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனால், ஒருவேளை இங்கிலாந்து அணி 100 ரன்னுக்கு ஆட்டமிழந்தால் அதனை 2.5 ஓவர்களிலும், 200 ரன்னுக்கு ஆட்டமிழந்தால் அதனை 4.3 ஓவர்களுக்குள்ளும், 300 ரன்னுக்கு ஆட்டமிழந்தால் அதனை 6.1 ஓவர்களில் சேஸ் செய்ய வேண்டும். ஆனால், இது எதுவும் முடியாத காரியம்.
எனவே, பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை முற்றிலுமாக இழந்து விட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.