Movie Review

ரசிகர்களிடம் பத்திக்கிச்சா ‘ஃபயர்’…படத்தின் விமர்சனம் எப்படி.!

ஃபயர் படத்தின் திரைவிமர்சனம்

நாகர்கோவிலில் டாக்டரான காசி என்ற நபர்,பல பெண்களை ஏமாற்றி,சீரழித்து சிறையில் தற்போது இருந்து வருகிறார்.இந்த கதையை மையமாக வைத்தே ஃபயர் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஜேஎஸ்கே சதீஸ்குமார்.

இதையும் படியுங்க: காதலர் தினத்தில் ஆட்டம் போட்ட பிக் பாஸ் அர்ச்சனா…வைரலாகும் வீடியோ.!

படத்தின் கரு

பிசியோதெரபி மருத்துவராக நடித்திருக்கும் பாலாஜியையே காணவில்லை என அவரது பெற்றோர்கள் போலீஸில் புகார் அளிக்கின்றனர்,உடனே போலீஸ் அவரை தீவிரமாக தேடுகிறது,அப்போது தான் ரஷிதா,சாந்தினி தமிழரசன்,சாக்ஷி அகர்வால்,காயத்திரி ஷான் ஆகியோருடன் பாலாஜி உல்லாசமாக இருந்து விட்டு,அவர்களிடம் மிரட்டி பணம் வசூலித்துள்ளதும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.

இவர்கள் மட்டுமில்லாமல்,மேலும் பல பெண்களை தன்னுடைய காதல் வலையில் விழ வைத்து சீரழித்துள்ளதால்,பாலாஜி முருகதாஸை உடனடியாக பிடிக்கும் படி அமைச்சரான சிங்கம் புலி,இன்ஸ்பெக்டர் ஜேஎஸ்கே-க்கு அழுத்தம் கொடுக்கிறார்,அதன் பிறகு போலீசார் பாலாஜியை எப்படி பிடித்தார்கள்,அவனுக்கும் அமைச்சருக்கும் என்ன தொடர்பு என்பதே படத்தின் மீதி கதையாக பயணிக்கிறது.

படத்தின் பிளஸ்

ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதால்,படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ள பாலாஜி தன்னுடைய வசீகர தோற்றத்தால்,அவருக்கு கொடுக்கப்பட்ட ரோலில் அற்புதமாக நடித்து அசத்தியிருப்பார்.பாதிக்கப்பட்ட பெண்களாக நடித்துள்ள நடிகைகளும் கவர்ச்சி காட்டி படத்தை மும்மரமாக கொண்டு சேர்த்துள்ளனர்.

மேலும் அமைச்சராக நடித்துள்ள சிங்கம் புலி, எஸ்ஐ ஆக நடித்துள்ள சுரேஷ் சக்கரவர்த்தி தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர் .
படத்தில் இயக்குனர் தான் சொல்ல வேண்டிய கருத்தை சமூக அக்கறையோடு மக்களுக்கு கொண்டு சேர்த்துள்ளார். டி கே இசையில் உருவாகியுள்ள பாடல்களும் படத்திற்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது.

படத்தின் மைனஸ்

படத்தில் பெண்களுக்கு ஒரு நல்ல விழிப்புணர்வை கொடுத்திருந்தாலும்,அங்கே அங்கே வரக்கூடிய எல்லை மீறிய கவர்ச்சி ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கிறது.மேலும் இன்ஸ்டபெக்டராக நடித்துள்ள ஜே எஸ் கே போலிஸுக்கு உண்டான தோற்றத்தில் அவ்வளவு எடுப்பாக இல்லை என ரசிகர்கள் கூறுகின்றனர்.

மொத்தத்தில் ஃபயர் படம் வர கூடிய நாட்களில் தீயாய் வசூலை அள்ளும் என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்படுகிறது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.