Movie Review

ரவி மோகன் ரசிகர்களை இழுத்தாரா…”காதலிக்க நேரமில்லை”படத்தின் திரைவிமர்சனம்..!

நவீன காதலை இப்படியும் பண்ணலாமா

ரவி மோகன்,நித்யாமேனன் நடிப்பில் உருவாகி பொங்கல் அன்று திரைக்கு வந்த திரைப்படம் காதலிக்க நேரமில்லை.இப்போ இருக்கக்கூடிய ஒரு நவீன காதலை மையப்படுத்தி இயக்குனர் கிருத்திகா உதயநிதி கச்சிதமாக எடுத்துள்ளார்.

ஒரு கட்டிடக்கலை நிபுணராக நடித்திருக்கும் நித்யாமேனன் ஜான் கொக்கனை 4 வருடமாக காதலித்து வருகிறார்.இருவரும் வெளிநாடு செல்வதற்காக அப்போதைக்கு ஒரு பதிவு திருமணம் செய்து கொள்கிறார்கள்.ஆனால் ஜான் கொக்கைன் வேறு ஒரு பெண்ணோடு நெருக்கமாக இருப்பதை பார்த்த நித்யாமேனன்,அவரிடம் இருந்து விலகி தனியாக பெங்களூரு செல்கிறார்.

காதலின் ஏமாற்றம், தைரியமான முடிவுகள், நேர்மையான கோபம் என வாழ்வை இயல்பான கண்ணோட்டத்தோடு அணுகுகிற நவீனக் காலத்துப் பெண்ணாக நித்யா மேனன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.ஆனால் நித்தியாமேனனுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை உள்ளதால் ஸ்பெர்ம் டோனர் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார்.

இதையும் படியுங்க: கல்லா கட்டிய நெட்ஃபிளிக்ஸ்…பல மாஸ் படங்களின் OTT உரிமைகளை வாங்கி அசத்தல்…!

எட்டு வருடங்களுக்கு பிறகு ஏற்கனவே பெங்களூரில் சந்தித்த ரவி மோகன் நித்யாமேனன் தங்கியிருக்கும் பக்கத்து வீட்டில் குடி வருகிறார்.நித்யா மேனன் 10 வயது பையனிடம் ரவி மோகன் நல்ல நட்பாக பேசி வருகிறார்.இதனால் நித்யா மேனனுக்கு ரவி மோகன் மீது ஒரு வித ஈர்ப்பு வருகிறது.இதில் சுவாரஸ்யமே நித்யா மேனனுக்கு ஸ்பெர்ம் டோனட் செய்த நபர் ரவி மோகன் தான்,ஆனால் இந்த விஷயம் யாருக்குமே தெரியாது.

அதன் பின்பு நித்யா மேனன் மற்றும் ரவி மோகன் இடையே காதல் மலர்ந்ததா,அவர்களுடைய அடுத்தகட்ட வாழ்க்கை படத்தில் எப்படி பயணித்தது என்பதே படத்தின் மீதி கதை.

இப்படியும் காதல் செய்யலாமா என்று ரொம்ப அழகா நேர்த்தியாக கதையை கொண்டு செல்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.சமீப காலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ரவி மோகனுக்கு,இப்படம் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என தெரிகிறது.ரவி மோகனின் நண்பர்களாக படத்தில் வினய் மற்றும் யோகி பாபு வருகிறர்கள்.நடிகர் வினய் படத்தில் பலரும் நடிக்க தயங்கும் ஓரின ஈர்ப்பாளராக நடித்து அசத்தி இருக்கிறார்.

ஒரு பெண்,ஆண் துணையில்லாமல் தைரியமாக இந்த உலகத்தில் வாழ முடியும் என அற்புதமாக காதலிக்க நேரமில்லை காட்டியுள்ளது.படத்தில் வரக்கூடிய ஏ ஆர் ரகுமான் பாடல்கள்,படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.ஒரு சில இடங்களில் தன்பாலின ஈர்ப்பு குறித்த கேலிகள் இருந்தாலும்,உறவுகளுக்கு இடையேயான அன்பை கதையின் போக்கிலேயே வெளிப்படையாக காட்டும் காதலிக்க நேரமில்லை,இப்போ இருக்கக்கூடிய இளையர்களுக்கு ஒரு நல்ல சோசியல் கருத்தை கொடுக்கும் என பேசப்படுகிறது

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.