Movie Review

அனல் பறக்கும் புஷ்பா 2..படத்தின் திரைவிமர்சனம் இதோ..!

புஷ்பா படத்தின் முதல் பாகம் வெளியாகி அனைவரையும் கவர்ந்து 1000 கோடி வசூலை அள்ளியது மட்டுமல்லாமல்,அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகரனுக்கான தேசிய விருதையும் வாங்கி தந்தது.

இதற்கிடையே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 3 வருடம் கழித்து புஷ்பா 2 தி ரூல்,இன்று பான் இந்தியா அளவில் வெளியாகி ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றுவருகிறது.

ஒரு சாதாரண சந்தன மர கடத்தலாக இருந்த புஷ்பா எப்பிடி ஒரு சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆளுகிறார் என்பதை தான் புஷ்பா 2 வின் கதையாக உருவெடுத்துள்ளது. அல்லு அர்ஜுன் சிவப்பு சந்தன சிண்டிகேட் சாம்ராஜ்யத்தின் முக்கிய தலைவராக மாறி, தனக்கென ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார்.


எஸ்.பி. பன்வர் சிங் ஷெகாவத் நடித்திருக்கும் ஃபஹத் பாசில் ஒவ்வொரு முறையும் புஷ்பாவின் சிவப்பு சந்தன மரத்தை சட்டவிரோதமாக கொண்டு செல்வதை தடுக்க முயற்சிக்கிறார்.


ஸ்ரீவள்ளியாக நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா புஷ்பா,முதல்வருடன் ஒரு புகைப்படம் எடுப்பதைப் பார்க்க ஆசைப்படுகிறார்,ஆனால் முதல்வர் புஷ்பா ராஜை ஒரு கடத்தல்காரர் என்று கூறி அவருடன் புகைப்படம் எடுக்க மறுக்கிறார்.

முதல்வரை நீக்கிவிட்டு தன்னுடைய சித்தப்பாவை அந்த பதவியில் அமர வைக்க புஷ்பா முடிவு செய்கிறார். அதே நேரத்தில் வெளிநாடு செல்லும் சிவப்பு சந்தன மர கட்டைகளை, பன்வர் சிங் ஷெகாவத் பிடிக்க முயற்சிக்கிறார்.அது நடந்தால், புஷ்பாவின் சாம்ராஜ்யத்திற்கு பெரிய ஆபத்து.

இதையும் படியுங்க: புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

இந்த இரு பிரச்னைகளை எப்படி சமாளித்தார் புஷ்பராஜ்? அதன் பிறகு என்ன நடந்தது?
புஷ்பாவின் சாம்ராஜ்ஜியத்தை தடுக்க பன்வர் சிங் ஷெகாவத் என்னவெல்லாம் செய்தார்? புஷ்பா அவரை எப்படி வீழ்த்தினார்? புஷ்பாவின் கனவு எப்படி நனவாகியது? தனது மூத்த சகோதரரின் மகளை காப்பாற்ற மத்திய அமைச்சர் பிரதாப் ரெட்டியுடன் புஷ்பா ஏன் சண்டையிட்டார்? இதுதான் புஷ்பா 2 படத்தின் கதை.


வெறும் மாஸ் காட்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் , இரண்டாம் பாகத்தில் குடும்ப உணர்வுகளுக்கு இடம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுகுமார்.

புஷ்பா மற்றும் பன்வர் சிங் ஷெகாவத் வரும் காட்சிகள் அதிரடியாக மட்டுமல்லாமல், நகைச்சுவை கலந்து ரசிக்கும்படியாக உள்ளது.பன்வர் சிங்கின் உயரத்தை புஷ்பா பின்னுக்குத் தள்ளும் காட்சிகள் த்ரில்லிங்கானவை.

படத்தில் உணர்வுகள் மற்றும் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லை. பாடல்கள் வேண்டுமென்றே கதையில் புகுத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது.மொத்தத்தில் பக்கா வணீகரீதியாக புஷ்பா 2 தி ரூல் அமைந்துள்ளது.

Mariselvan

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.