விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஒட்டி விழுப்புரம் – திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லை பகுதியான கண்டாச்சிபுரம் அருகே உள்ள மழவந்தங்கள் கிராமத்தில் மாவட்ட எல்லை பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, திருக்கோவிலூரில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்காக கண்டாச்சிபுரம் வழியாக சென்ற வாகனத்தை நிறுத்தி, சோதனை சாவடியில் போலீசார் சோதனை செய்துள்ளனர்.
அப்போது வாகனத்தில் இருந்த மதனகோபால் எனும் மருத்துவர் வாகனத்தில் ஒரு கோடி ரூபாய் பணம் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். பின்னர், நடத்திய விசாரணையில் கோயம்புத்தூரில் தனது தகப்பனார் நிலத்தை விற்று தன்னிடம் ஒரு கோடி ரூபாய் பணத்தை கொடுத்ததாகவும், அதனை சென்னை எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் விழுப்புரம் மாவட்ட கருவூலத்தில் பணம் ஒப்படைக்க எடுத்துச் செல்ல உள்ளதாக தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் நேரத்தில் சொகுசு காரில் ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.