தஞ்சையில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 1 கிலோ வெள்ளி நகை திருடு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சை மாதாக்கோட்டை ரோடு காவேரி நகரை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மனைவி சத்தியவதி (68). சம்பவத்தன்று இவர்கள் சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பீரோவை திறந்து 1 கிலோ வெள்ளி, அரை பவுன் தங்க நகையை திருடி தப்பி ஓடிவிட்டனர். கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தியவதிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் தமிழ்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். இது பற்றிய புகாரின் பேரில் விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
இதேப்போல் தஞ்சை மாதாக்கோட்டை ரோடு குழந்தையேசு கோவில் நகரில் உள்ள ஒரு வீட்டில் ஒரு கதவை உடைத்து மர்மநபர்கள் திருட முயன்றனர். அதற்குள் வீட்டில் உள்ளவர்கள் எழுந்து சத்தம் போட்டதால் அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.