தஞ்சையில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 1 கிலோ வெள்ளி நகை திருடு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சை மாதாக்கோட்டை ரோடு காவேரி நகரை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மனைவி சத்தியவதி (68). சம்பவத்தன்று இவர்கள் சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பீரோவை திறந்து 1 கிலோ வெள்ளி, அரை பவுன் தங்க நகையை திருடி தப்பி ஓடிவிட்டனர். கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தியவதிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் தமிழ்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். இது பற்றிய புகாரின் பேரில் விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
இதேப்போல் தஞ்சை மாதாக்கோட்டை ரோடு குழந்தையேசு கோவில் நகரில் உள்ள ஒரு வீட்டில் ஒரு கதவை உடைத்து மர்மநபர்கள் திருட முயன்றனர். அதற்குள் வீட்டில் உள்ளவர்கள் எழுந்து சத்தம் போட்டதால் அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.