தமிழகம்

பரிட்சைக்கு படிக்காம செல்போனை நோண்டுனா எப்படி பாஸ் ஆகுவ.. பெற்றோர் திட்டியதால் +1 மாணவி விபரீத முடிவு!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் மாரம்பாடி கஸ்தூரி நகரை சேர்ந்தவர் ஜெகன் அவரது மனைவி கலாராணி இவர்களுக்கு சௌமியா என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

சௌமியா அரசு உதவி பெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சௌமியா செல்போனை பார்த்துக் கொண்டே இருந்துள்ளார்.

இதனைக் கண்ட அவரது தாயும் தந்தையும் நாளை பரீட்சை உள்ளது அதனால் பரீட்சைக்கு படிக்காமல் செல்போனை பார்த்துக் கொண்டே இருந்தால் எப்படி பரீட்சை எழுத முடியும் என்று கடுமையாக திட்டி உள்ளனர்.

இதனால் மனம் வெறுத்த சௌமியா வீட்டுக்குள் சென்று தனது துப்பட்டாவால் தூக்கு மாட்டிக் கொண்டார். உடனடியாக அவரை மீட்ட பெற்றோர்கள் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி அளவில் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.

மேலும் படிக்க: டெல்லியை ஆளும் 3வது பெண் முதலமைச்சர்.. அதிஷி பெயரை முன்மொழிந்த கெஜ்ரிவால்..!!

வேடசந்தூரில் 108 ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் உறவினர்கள் தவித்தனர்.

இதேபோல் ஞாயிற்றுக்கிழமை இரவு விபத்தில் படுகாயம் அடைந்த விட்டல் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த நூற்பாலை தொழிலாளி காளிமுத்து விபத்து ஏற்பட்டும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வேடசந்தூரில் ஆம்புலன்ஸ் இல்லாததால் உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.