குழந்தை கடத்தல் வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவின் கீழ் தாயை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மங்கமாள்புரம் பகுதியைச் சேர்ந்த ஜானகி என்பவரின் பிறந்த 10 நாள் ஆன பெண் குழந்தையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி குழந்தையை கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த வரும் நிலையில் குழந்தையின் தாய் ஜானகியை லால்குடி போலீஸார் கைது செய்து கடத்திய குழந்தை எங்கே உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வழக்கறிஞர் பிரபு அவர்களின் இரண்டாவது மனைவி சண்முகவள்ளி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
போலீஸ் விசாரணையில் கடத்தப்பட்ட குழந்தையின் தாய் ஜானகி முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்ததால், கடத்தப்பட்ட குழந்தை 4 மாதங்கள் கடந்தும் மீட்கபடாத நிலையில் குழந்தையின் தாய் ஜானகியை ஐந்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவின் பேரில் மூன்று ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து வழக்கறிஞர் பிரபு அவரது இரண்டாவது மனைவி சண்முகவள்ளியை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தக் கடத்தல் சம்பவத்தில் குழந்தையை விற்பனைக்காக கடத்தியார்களா? அல்லது நரபலி கொடுப்பதற்காக கடத்தினார்களா? என்பது கொடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.