கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நெல்லித்துறை அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய கிராமமாகும், இங்கு சைலஜா என்பவரது தோட்டத்தில் மோட்டார் அறையில் பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து வனத்துறையினர் மற்றும் தனியார் தொண்டு அமைப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர் அப்பொழுது அங்கு மிகவும் ஆபத்தான விஷம் கொண்ட 10 அடி நீளமுள்ள அரிய வகை ராஜநாகம் என்பது தெரியவந்தது.
இதை அடுத்து உடனடியாக அந்த ராஜநாகம் மீட்கப்பட்டு காப்புக் காடு பகுதியில் நீர் நிலை அருகில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது. ராஜநாகம் மட்டுமே மற்ற பாம்புகளை உணவாக உட்கொள்ளக் கூடியது.
மேலும் தனது வாழ்விடத் திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் சுற்றளவு வரை சென்று உணவு தேடக்கூடிய தன்மை உடையதாகவும் கூறப்படுகிறது. மேலும் ராஜ நாகம் ஒருவரை தீண்டினால் 20 வினாடிகளில் உயிர் பிரியும் ஆபத்து உள்ளதாக வனவியலாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஆபத்தான இராஜ நாகத்தைமீட்டு காப்பு காட்டில் விடுவித்த wildlife Wranglers,வண்ணம் ஆகிய தனியார் தொண்டு அமைப்பினர்களையும் வனத்துறையினரையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது”…
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
This website uses cookies.