டாஸ்மாக்கில் மாயமான 10 லட்சம் ரூபாய் மதுபானம்:செய்தியாளர்களை ஒருமையில் பேசி தகராறு செய்த டாஸ்மாக் ஊழியர்கள்…!!

திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் குடோனில் இருந்து 265-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு மதுபானங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த குடோன் வளாகத்திலேயே டாஸ்மாக் மாவட்ட மண்டல மேலாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

லாரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் தொழிலாளர்கள் மதுபான பாட்டில்களை பெட்டி பெட்டியாக ஏற்றி அனுப்புவது வழக்கம். இதனை டாஸ்மாக் ஊழியர்கள் ஆய்வு செய்து அதன் பிறகே அனுப்பப்படுவது வழக்கம். திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பணி காலியாக இருப்பதால் கிழக்கு மாவட்ட மேலாளர் ரேணுகா பொறுப்பு அதிகாரியாக நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் உள்ள டாஸ்மாக் குடோனில் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் காணாமல் போனதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.

இரண்டு மெயின் கேட்டுகள் காவலாளிகள் சிசிடிவி கேமரா என பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த டாஸ்மாக் மண்டல அலுவல குடோனில் இருந்து எப்படி மது பாட்டில்கள் மாயம் ஆகியது சமூக வலைதளங்களில் எவ்வாறு இது வைரல் ஆனது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்ட நிலையில் இன்று தொழில்பேட்டையில் உள்ள மண்டல டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் ஆய்வு செய்தனர்.

இது குறித்து செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் ஒளிப்பதிவாளர்களை படம் பிடிக்க விடாமல் ஒருமையில் பேசி டாஸ்மாக் மண்டல அலுவலக ஊழியர்கள் காவலில் தகராறு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.