Categories: தமிழகம்

திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவத்தில் கோவையில் ஒரே நாளில் 10 பேர் கைது – ரூ.40 லட்சம் மதிப்பிலான 114 சவரன் நகைகள் பறிமுதல்..!

கோவை: திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 10-பேர் கைது செய்யப்பட்டு, ஒரே நாளில் திருடு போன 114 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் வழிப்பறி மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கைது செய்தனர்.

இதில் சிறப்பாக செயலாற்றிய காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுகளை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்பி பத்ரிநாராயணன், சிறுமுகை காவல் நிலைய சரகத்தில் கடந்த வாரம் இருசக்கர வாகனத்தில் பணத்துடன் வந்த டாஸ்மாக் சூப்பர்வைசர் விஜயானந்த் என்பவரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்து வழிப்பறி செய்ய முயற்சி செய்ததில் சிவகங்கையைச் சேர்ந்த ஆகாஷ், லோகநாதன், மனோஜ், பட்டுக்கோட்டை சேர்ந்த ராஜா என்ற ரவிக்கண்ணன் மற்றும் சதீஷ் ஆகியோர்கள் கைது செய்துள்ளதாகவும், இதுபோல் சிறுமுகை மற்றும் அன்னூர் பகுதிகளில் 6 வழிப்பறி மற்றும் வழிப்பறி முயற்சி வழக்குகளில் ஈடுபட்டதை கண்டறிந்து அவர்களை தனிப்படையினர் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து சுமார் 14 ½ பவுன் தங்க நகைகளை மீட்கப்பட்டதாக தெரிவித்தார். அதேபோல் காரமடை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மூன்று வழக்குகளில் ஈடுபட்ட திருநெல்வேலியைச் சுரேஷ் (எ) சூட்டு சுரேஷ், தென்காசியைச் சேர்ந்த மருதராஜ் (எ) சப்ஜெயில் ராஜா,தூத்துக்குடியைச் சேர்ந்த செந்தில் மருதுபாண்டி (எ) மருது ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 72 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 இரு சக்கர வாகனத்தையும் மீட்டனர்.

அதேபோல் கோவில்பாளையம் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மூன்று வழக்குகளில் ஈடுபட்ட நீலகிரி மாவட்டத்தைச் சாலமன்மற்றும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 27 ½ பவுன் தங்க நகைகளை மீட்டனர்.

மொத்தமாக ஒரே நாளில் வழிப்பறி மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 10 நபர்களை கைது செய்துள்ளதாகவும் இவர்களிடமிருந்து மொத்தம் 114 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Poorni

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

12 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

14 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

14 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

15 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

15 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

16 hours ago

This website uses cookies.