கன்னியாகுமரி மாவட்டம் தலக்குளம் கிராமத்தில் 70 வயதான பிரபல மூளை நரம்பியல் நிபுணரான ஒருவர், தனது கால்கள் இரண்டும் செயலிழந்த நிலையிலும், சக்கர நாற்காலியில் சுழன்றபடியே நோயாளிகளுக்கு 10 ரூபாயில் மருத்துவம் பார்த்து வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் அருகே உள்ள தலக்குளம் என்ற கிராமத்தில் 1953-ல் பிறந்த பிரபல மூளை நரம்பியல் நிபுணரான மருத்துவர் ஆறுமுகம். அரசு பள்ளியில் பள்ளி படிப்பை முடித்து தனியார் கல்லூரியில் பட்ட படிப்பை முடித்ததோடு, 1974-ம் ஆண்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் முடித்த கையோடு, நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.
பின்னாளில் பல மேற்படிப்புகளை மேற்கொண்ட ஆறுமுகம் 1989ல் மாவட்டத்தில் முதல் நரம்பியல் நிபுணராக பயிற்சி பெற்று வந்துள்ளார். 1992ல் அவருக்கு விஷக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு, இரு கால்களும் செயலிழந்த நிலையிலும், தன்னம்பிக்கையுடன் 1993-ல் திங்கள்நகர் பகுதியில் ஒரு வாடகை வீடு எடுத்து சுற்றுவட்டார கிராம மக்களுக்கு 10 ரூபாயில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
ஒரிரு வருடங்களில் தனது கிராமமான தலக்குளம் பகுதியில் சொந்தமாக மருத்துவமனை கட்டி தனது 10 ரூபாய் மருத்துவ சேவையை தொடர்ந்து வருகிறார்.
பொது மருத்துவம், இருதய கோளாறு, மூளை நரம்பியல் சம்பந்தமான நோய்களுக்கும் 10 ரூபாயிலேயே மருத்துவம் பார்க்கும் மருத்துவர் ஆறுமுகம், வசதியற்ற ஏழைகளை தனது மருத்துவமனையில் அனுமதித்து உணவு மருந்து மாத்திரைகள் என முழு சிகிச்சையையும் இலவசமாக வழங்கி வருகிறார்.
அதோடு, அவசர வார்டு முதல் சாதாரண வார்டுகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை சக்கர நாற்காலிகளில் சுழன்றபடி தானே நேரில் சென்று தனிக்கவனம் செலுத்தி பரிசோதித்து மருத்துவமும் செய்கிறார்.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.