திருவாரூர் : திருவாரூரில் 10 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் அருகே ஐந்தாம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுமி தனது வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த பொழுது அடியக்கமங்கலம் புது காலனி தெருவைச் சேர்ந்த சேத்தப்பா 22 வயது என்கிற நபர் சிறுமியை வாயை கட்டி தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் சிறுமி அலறல் சத்தம் போட்டுக்கொண்டு வீட்டை நோக்கி ஓடி வந்து தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். உடனடியாக பெற்றோர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சேத்தபாவை தேடிச் சென்ற பொழுது அந்த இடத்திலிருந்து சேத்தப்பா தப்பிச் சென்றுள்ளான்.
இந்த நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் குறித்து திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சேத்தப்பாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் சேத்தப்பா தனியார் கேட்டரிங் சர்வீஸில் பணிபுரிந்து வருவதாகவும் மதுபோதையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.