கோவை : 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையை அடுத்த அன்னூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு பாடம் எடுத்து வரும் ஆசிரியர் மாணிக்க சுந்தரம் (வயது 46),இவர் அப்பகுதியில் உள்ள 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக தெரிகிறது.
இதனையடுத்து பெற்றோர்கள் கடந்த 17 தேதி 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அன்னூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அன்னூர் போலிசார் ஆசிரியர் மாணிக்க சுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தியதில், முதற்கட்ட விசாரணையில் பாலியல் தொல்லை அளித்தது உண்மை என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியர் மாணிக்க சுந்தரத்தை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அரசுப் பள்ளி ஆசிரியரே இம்மாதிரியான செயல்களில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.