காலாவதியான மருந்துகளை வெறும் கையால் அள்ள வைத்த ஆரம்ப சுகாதார நிலையம்.. உடல்நலக்குறைவால் பழங்குடியினர் அவதி!!
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி புதுத் தெருவில் இருளர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாள் வேலையை மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கியுள்ளனர்.
இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் பஞ்சாயத்து தலைவர் கூறியதாக கூறி பஞ்சாயத்து பணியாளர் பிரவீனா, மற்றும் அண்ணாதுரை ஆகியோர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழைய கட்டிடத்தில் காலாவதியான மருத்துவ கழிவுகள் பல வருடங்கள் ஆன நிலையில் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அதனை சுத்தம் செய்ய கூறி உள்ளனர்.
இதனை மறுத்த போது இதை சுத்தம் செய்யாவிட்டால் வேலை இல்லை என்று கூறி உள்ளதாக கூறுகின்றனர். மேலும் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளே மருத்துவமனை கட்டிடம் சித்த மருத்துவம் பிரிவு அருகில் கட்டிடத்தில் ஓரம் ஒரு நாய் இறந்த நிலையில் துர்நாற்றம் வீசி வருகிறது.
இந்நிலையில் அந்த மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இந்த காலாவதியான ஆரம்ப சுகாதார மருத்துவ கழிவுகளால் அதை அப்புறப்படுத்த சென்றவர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.
மேலும் இந்த கழிவுகளை உபகரணங்கள் இன்றி அப்புறப்படுத்தி அதன்மூலம் நோய் தொற்று ஏற்பட்டு குடும்பத்தில் உள்ள நபர்கள் அனைவருக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
ஆகையால் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருளர் பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்ததுடன், மேலும் இதே மருத்துவமனையை தான் நாங்களும் பயன்படுத்தி வருகிறோம்.
எனவே மருத்துவமனை சுற்றுப்புறத்தை தூய்மை பேணி பாதுகாத்து மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை நோய் தொற்று பரவாமல் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.