புதுக்கோட்டை அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த விரக்தியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் காவல் சரகத்திற்குட்பட்ட ஆதித்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் அனுஸ்ரீ (14). இவர் மேலபட்டு அருகில் உள்ள பிள்ளைகள் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தற்போது நடந்த காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்திருப்பதாக, அவரது அண்ணனும் தாயாரும் திட்டுவார்கள் என்ற பயத்துடன் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இரவு யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரைப் பார்த்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் அக்கம்பக்கத்தினர் கூறினர். அந்த மாணவி தன் கைப்பட கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளார்.
அதில், ‘என் தந்தை சென்ற இடத்திற்கே நானும் செல்கிறேன். நான் காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளேன். அதனால் என் அண்ணனும் என் அம்மாவும் என்னை திட்டுவார்கள். அதனால் தான் இந்த முடிவு,’ என்று எழுதி வைத்துள்ளார். இது குறித்து ஆவுடையார் கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.