புதுக்கோட்டை அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த விரக்தியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் காவல் சரகத்திற்குட்பட்ட ஆதித்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் அனுஸ்ரீ (14). இவர் மேலபட்டு அருகில் உள்ள பிள்ளைகள் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தற்போது நடந்த காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்திருப்பதாக, அவரது அண்ணனும் தாயாரும் திட்டுவார்கள் என்ற பயத்துடன் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இரவு யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரைப் பார்த்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் அக்கம்பக்கத்தினர் கூறினர். அந்த மாணவி தன் கைப்பட கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளார்.
அதில், ‘என் தந்தை சென்ற இடத்திற்கே நானும் செல்கிறேன். நான் காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளேன். அதனால் என் அண்ணனும் என் அம்மாவும் என்னை திட்டுவார்கள். அதனால் தான் இந்த முடிவு,’ என்று எழுதி வைத்துள்ளார். இது குறித்து ஆவுடையார் கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
This website uses cookies.