குமரி மாவட்டத்தில், 10ஆம் வகுப்பு மாணவி தனது இன்ஸ்டாகிராம் தோழருடன் நெருங்கி இருந்ததில் கர்ப்பமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி: குமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெர்வின் (21). இவருக்கும், அருகில் உள்ள பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இவர் அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இதனையடுத்து, பள்ளிக்குச் சென்று வரும்போது இரண்டு பேரும் பேசி வந்து உள்ளனர். இந்த நிலையில், சிறுமியை கடந்த செப்டம்பர் மாதம் தனது அந்த இளைஞர் தனது கிராமத்துக்கு அழைத்து வந்து உள்ளார்.
பின்னர், அங்கு உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றிற்கு சிறுமியை அழைத்துச் சென்று உள்ளார். அங்கு வைத்து பேச்சு கொடுத்த இளைஞர், உன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி உள்ளார். இதனையடுத்து, சிறுமியுடன் உடலுறவு கொண்டு உள்ளார். பின்னர், இதுபோன்று பலமுறை நடந்து உள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. எனவே, சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். அப்போது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய், இது குறித்து சிறுமியிடம் விசாரித்து உள்ளார்.
இதையும் படிங்க: அரியலூரில் இறங்கிய தவெக கொடி.. புஸ்ஸி ஆனந்தால் உட்கட்சி பூசலா? பகீர் காரணம்!
அப்போது, நடந்த விஷயங்களை சிறுமி கூறியுள்ளார். இதனையடுத்து, குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான இளைஞரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.