பைக்கில் சென்ற தம்பதி…வழிமறித்து தாக்கிய மர்ம கும்பல்: 11 சவரன் நகை கொள்ளை…ஆபத்தான நிலையில் கணவருக்கு சிகிக்சை..!!

Author: Rajesh
3 April 2022, 4:50 pm
Quick Share

திருவாரூர்: பைக்கில் சென்ற தம்பதியை தாக்கி 11 சவரன் நகையை நகையை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் மக்களை அதிர்ச்சியைடைய செய்துள்ளது.

திருவாரூர் அருகே துர்காலயா சாலையில் தையல் கடையில் வேலை பார்த்து வருபவர் கருப்பூர் கிராமத்தை சேர்ந்த மேகலா (48 ), இவரது கணவர் வீரராகவன் (55), கட்டுமான பொறியாளர்.

இந்த நிலையில் நேற்று இரவு திருவாரூரில் தையல் கடையை பூட்டிவிட்டு வீரராகவன் அவரது மனைவி மேகலா இருவரும் கருப்பூரில் உள்ள தனது வீட்டுக்கு வழக்கம்போல் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

அலிவலம் பகுதி அருகே சென்றபோது முகமூடி அணிந்து வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல் வீரராகவனை இரும்பு கம்பியால் தாக்கியதுடன் மேகலா அணிந்திருந்த 11 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த கணவன் சம்பவ இடத்திலேயே மயங்கி செய்வதறியாது கிடந்துள்ளார்.

அந்த வழியாக வந்த நபரொருவர் பார்த்துவிட்டு அப்பகுதி மக்களுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். அதன் பின்னர் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வீரராகவனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். வீர ராகவனுக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து சம்பவம் குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் மேகலாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதி மக்களிடம் விசாரித்த போது 6 பேர் கொண்ட கும்பல் மோட்டார் பைக்கில் வேகமாக சென்றதாக தெரிவித்தனர்.


சம்பவம் நடந்த அலிவலம் பகுதியில் வழிநெடுகிலும் மின் விளக்கு இல்லாத சூழலைப் பயன்படுத்தி இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக திருட்டு மற்றும் வழிப்பறி அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் ஒரே நாளில் இரண்டு இடங்களில் 100 ரூபாய் பணத்தை கீழே போட்டு கவனத்தை திசை திருப்பி சுமார் 2 லட்ச ரூபாய் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இது போன்ற நிகழ்வுகள் அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைய தொடங்கியுள்ளனர். போலீஸார் கொள்ளையர்களை விரைவாக பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 695

0

0