Categories: தமிழகம்

கோவில் திருவிழாவில் நாடகம் பார்த்த போது விபத்து : மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியான 11 வயது சிறுவன்!!

புதுச்சேரி : கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி முதலியார்பேட்டையை சேர்ந்தவர் நித்தியானந்தன், அவரது மகன் சித்து என்ற பிரணவ் (வயது 11). அங்குள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகின்றான், சுத்துகேனியில் உள்ள தனது தாத்தா வேலுச்சாமி வீட்டுக்கு சித்து சென்றுள்ளான்,

அங்கு நேற்று இரவு அம்மன் கோவில் திருவிழா நாடகம் நடைபெற்றது, அப்போது சாமியை ஊர்வலமாக எடுத்து செல்ல பயன்படுத்தப்படும் வண்டியில் அமர்ந்து சித்து உள்பட சிலர் நாடகம் பார்த்து கொண்டிருந்தனர்.

நள்ளிரவு நேரத்தில் வண்டியில் கட்டப்பட்டிருந்த மின்விளக்கில் (போகஸ் விளக்கு) இருந்து திடீரென மின்கசிவு ஏற்பட்டதை அடுத்து வண்டியில் அமர்ந்து இருந்தவர்களின் மீது மின்சாரம் தாக்கியதால் பலரும் எகிறி குதித்து ஓடினர்.

ஆனால் சித்துவால் ஓட முடியாததால் மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்துள்ளான், உடனடியாக அக்கம்பக்கத்தினர் சித்துவை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சித்து உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் தனியார் மருத்துவமனை வந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக அஜ்ஜாக்கிரதையாக இருந்த கோயில் நிர்வாகத்தினர் மற்றும் எலக்ட்டிஸியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

11 வயது மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது..

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?

மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

4 hours ago

நாளை போர் ஒத்திகை.. தமிழகத்தில் 4 இடங்களை தேர்வு செய்தது மத்திய அரசு!

பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…

4 hours ago

நான் அழவில்லை, தப்பா புரிஞ்சிக்காதீங்க- தனது உடல்நிலையை குறித்து பகீர் கிளப்பிய சமந்தா!

தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…

5 hours ago

இனி சந்தானம்தான் ஹீரோ? கௌதம் மேனன் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாரே? எப்படி இருந்த மனுஷன்!

ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…

5 hours ago

7 வயது சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த அண்டை வீட்டு பெண்.. கோவையில் அதிர்ச்சி!

கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…

6 hours ago

சோபிதா சொன்ன குட் நியூஸ்… விழா எடுத்து கொண்டாட நாகர்ஜூன் குடும்பம் முடிவு?!

நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…

6 hours ago

This website uses cookies.