Categories: தமிழகம்

114 கி.மீ. மின்னல் வேகம்… தரமணி சாலையில் தரிகெட்டு ஓடிய பைக் : குட்டி யானை மீது மோதியதில் சாலையில் சடலமான இளைஞர்!!

தமிழ்நாட்டில் யூடியூப்பர்கள் சிலர், மின்னல் வேகத்தில் வாகனங்களை ஓட்டி அதை வீடியோவாக எடுத்து இணையத்திலும் பகிர்கின்றனர். இதுவே பலருக்கும் தவறான முன்னுதாரணமாகி விடுகிறது. மின்னல் வேகத்தில் வாகனம் ஓட்டி அதை வீடியோவாக எடுத்துப் பதிவிடும்போது, பல மோசமான விபத்துகள் ஏற்படுகிறது. அப்படியொரு மிக மோசமான விபத்து தான் தலைநகர் சென்னையில் அரங்கேறியுள்ளது.

சென்னை தரமணி தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் பிரவீன்.. 19 வயதான இவர், சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவரது நண்பர் ஹரி. 17 வயதான இவர். வேளச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் +2 படித்து வந்தார். இதற்கிடையே இருவரும் பைக்கை மின்னல் வேகத்தில் இயக்கி, அதை வீடியோவாக எடுத்துப் போடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

பிரவீன் பைக்கை ஓட்ட ஹரி அவரது பின்னால் அமர்ந்து கொண்டார். தரமணி 100 அடி சாலையில் இவர்கள் அதிவேகமாக பைக்கை இயக்கியுள்ளனர். இதனை அவர்கள் வீடியோவாகவும் மொபைலில் பதிவு செய்துள்ளனர்.

அப்போது எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியில் இருந்து வந்த லோடு வேன் ஒன்று தரமணி சந்திப்பு அருகே யூடர்ன் செய்துள்ளது. மின்னல் வேகத்தில் வந்ததால், வாகனத்தை அவர்களால் உடனடியாக நிறுத்த முடியவில்லை.

லோடு வேனில் பைக் இடிக்காமல் இருக்க வாகனத்தை ஸ்லோ செய்த போது, திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் இருவருக்கும் மிக மோசமான காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விபத்து செவ்வாய்க்கிழமை நடந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இப்போது வெளியாகி உள்ளது. அதில் இருவரும் சுமார் 114 கிமீ வேகத்தில் தரமணி சாலையில் வேகமாகச் செல்கின்றனர்.

அப்போது லோடு வேன் யூடர்ன் போடுவதைப் பார்த்து, இவர்கள் வண்டியை ஸ்லோ செய்ய முயலும்போது கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தும் அந்த வீடியோவில் மிகத் தெளிவாகப் பதிவாகி உள்ளது.

அவர்கள் மின்னல் வேகத்தில் சென்றதே இந்த விபத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது. இதற்கிடையே படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அன்று இரவே சிகிச்சை பலனின்றி பிரவீன் இறந்தார்.

பின்னால் அமர்ந்திருந்த ஹரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரும் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், லோடு வேன் டிரைவர் குணசேகரனை (வயது 45) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

2 days ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

2 days ago

This website uses cookies.