வேலூர் : காட்பாடி ரயில் நிலையத்தில் ஒடிசாவில் இருந்து திருப்பூருக்கு கடத்த முயன்ற 12 கிலோ கஞ்சாவை காட்பாடி ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்திற்கு தன்பாத்தில் இருந்து அலப்புழா சென்ற விரைவு ரயிலில் பெட்டி எண்S-6 கஞ்சா கடத்துவதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா, உதவி ஆய்வாளர் எழில்வேந்தன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒடிசாவில் இருந்து திருப்பூருக்கு கடத்த முயன்ற 12 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்திர கன்ஹார், சுனில் துமானியன், மனோஜ் பில் ஆகிய 3 பேரை கைது செய்து காட்பாடி இருப்புப்பாதை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 12 கிலோ கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.