ஒரே நாளில் 12 ரவுடிகள் கைது.. போலீசார் அதிரடி வேட்டை : விசாரணையில் சிக்கிய 20 பேர்…!!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2023, 9:45 am
Rowdys Arrest - Updatenews360
Quick Share

தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையினரின் அதிரடி வேட்டையில் தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள ரவுடிகளின் அட்டகாசங்களை கட்டுப்படுத்தும் மற்றும் குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும் பொதுமக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த 30. 01. 2023 முதல் 02. 02. 2023 நேற்று வரை நடைபெற்ற காவல்துறையினரின் அதிரடி வேட்டையில் 12 ரவுடிகள் உட்பட 20 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்,

மேலும் மாவட்டத்தில் உள்ள 302 ரவுடிகள் வீடுகளில் சோதனை செய்யப்பட்டு அதில் 4 அறிவாள்கள் மற்றும் 2 கத்திகள் கைப்பற்றப்பட்டது.

மேலும் அதனை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் கள்ளத்தனமாக விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 1860 மதுபாட்டில்களும் கஞ்சா விற்பனை செய்தவரிடம் இருந்து 680 கிராம் கஞ்சாவையும் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும் குற்ற வழக்குகளில் தேடப்பட்ட வரும் ரவுடிகளின் கூட்டாளிகள் மற்றும் அதனைத் தொடர்ந்து அவர்களை கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது குற்ற வழக்குகள் விரைந்து தண்டனை பெறுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தஞ்சை மாவட்ட காவல்துறை தகவல்களை வெளியிட்டுள்ளது.

Views: - 525

0

0