திருப்பூர் : 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு 70 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய திருப்பூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்சார வாரியத்தில் பணி புரிந்து வந்த நவரசன் என்பவர் தனது வீட்டருகே உள்ள 12 வயது சிறுமியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்து அதனை செல்போனில் வீடியோ எடுத்து வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நவரசன் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர் .
இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நவரசனுக்கு மகிளா நீதிமன்ற நீதிபதி சுகந்தி 70 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.