Categories: தமிழகம்

12 வயது சிறுமியின் வாயை பொத்தி கூலித்தொழிலாளி செய்த கொடூர சம்பவம் : ஊரை விட்டு ஓடிய போது நேர்ந்த கதி!!

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 40). இவர் பனமரத்துப்பட்டி அடுத்துள்ள ஆத்துப்புதூரில் கல் உடைக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த சில மாதங்களாக ஆத்துப்புதூரில் சம்பத் தங்கி கல் உடைக்கும் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சம்பத் அதே பகுதியில் வசிக்கும் ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து பனமரத்துப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். பின்னர் இதுகுறித்து கொண்டலாம்பட்டி மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

இதன் பெயரில் சேலம் ரூரல் டி.எஸ்.பி. தையல்நாயகி மற்றும் போலீசார் விசாரித்து கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

அப்போது சம்பத் பனமரத்துப்பட்டி அருகே உள்ள கரடு பகுதியில் தப்பி ஓடி உள்ளார். அவரை காவல்துறையினர் துரத்திச் சென்றனர். அப்போது சம்பத் கால் தவறி கீழே விழுந்து வலது காலில் படுகாயம் அடைந்தான்.

பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் சம்பத் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதன்பின் சம்பத் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பத்திற்கு வலது காலில் பலத்த காயமடைந்து உள்ளார். இதனால் அவருக்கு சிகிச்சை முடிந்த பின்னர் சேலம் சிறையில் அடைக்க காவல்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

5 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

5 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

6 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

7 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

7 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

8 hours ago

This website uses cookies.