கரூரில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூரை அடுத்த வெண்ணமலை அரசன் நகரைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் ஸ்ரீனா (17). இவர் வெண்ணமலையில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஸ்ரீனாவுக்கு தலையில் பொடுகு பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது பெற்றோர் மாணவிக்கு பாப் கட்டிங் செய்துள்ளனர். இதன் காரணமாக அவர் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பெற்றோருடன் நேற்று அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த போது மகளை காணாமல் பெற்றோர் தேடியுள்ளனர். அப்போது வீட்டினுள் தூக்கு போட்டுக் கொண்ட நிலையில் இருந்துள்ளார். மாணவியை மீட்ட பெற்றோர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது பற்றி மாணவியின் தந்தை வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.