இன்ஸ்டாகிராமில் பழகிய நபர் உள்பட பலரால் நாமக்கலைச் சேர்ந்த 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 9ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி. இவர் கடந்த அக்டோபர் மாதம் பள்ளிக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டுச் சென்று உள்ளார், ஆனால் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் தங்களது மகளைக் காணவில்லை என ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரித்து வந்தனர். அதில், அந்த மாணவிக்கு இன்ஸ்டாகிராமில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞர் உடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இது நாளடைவில் காதலாகவும் மாறி உள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று தாயின் செல்போனை மாணவி எடுத்துச் சென்று உள்ளார்.
எனவே, அதனை வைத்து போலீசார் விசாரித்ததிதில், மாணவி திருவண்ணாமலையில் இருப்பது தெரிய வந்து உள்ளது. உடனடியாக அங்கு சென்ற போலீசார், மாணவியை மீட்டனர். பின்னர் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியை 5 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்து உள்ளது.
மேலும், இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட பழக்கம் காரணமாக, நேரில் பார்ப்பதற்காக மாணவியை அந்த இளைஞர் திருவண்ணாமலைக்கு வரவழைத்துள்ளார். பின்னர், சிறுமியை நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து அவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
இதையும் படிங்க: அண்ணாமலை பைல்ஸ் 1.. DMK Files 3-க்கு பதில்? திருச்சி சூர்யா பரபரப்பு பதிவு!
இந்த நிலையில், 9ஆம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக விக்னேஷ் (26), சஞ்சய் (20), ஆகாஷ் (22), இளங்கோவன் (30) மற்றும் செல்வகுமார் (19) ஆகிய 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.