Categories: தமிழகம்

முகநூலில் பழகி 14 வயது சிறுமி கடத்தல்.. 2 வருடமாக நாடோடி வாழ்க்கை : பெண் குழந்தை பெற்றெடுத்த கொடுமை.. கேடி கைது!!

தருமபுரி : சமூக வளைதளம் மூலம் 14 வயது பள்ளி மாணவியை காதலித்து கடத்தி இரண்டாவது திருமணம் செய்து குழந்தை பெற்று 2 ஆண்டுகளாக தலைமறைவான இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் பகுதியை சேர்ந்த நரசிம்மன் (வயது 25), இவர் கர்நாடக மாநிலம் பொம்மனஹள்ளியில் தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அங்கிருந்து தருமபுரி அடுத்த பழைய தருமபுரி பகுதியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வளைதளம் மூலம் காதலித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியாமல் கடத்தி சென்றுள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தருமபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தன் பேரில் நரசிம்மனை காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் காவல் துறையினரிடம் சிக்காமல் அவருடைய இருசக்கர வாகனத்திலேயே கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாரஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மாணவியை அழைத்து சென்றுள்ளார்.

நரசிம்மனுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அதனை மறைத்து ஆசை வார்த்தைகள் கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்த நிலையில் மாணவி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். மேலும் காவல் துறையினர் தன்னை தேடுவதை அறிந்து நிரந்தரமாக எங்கும் தங்காமல் அடிக்கடி இடமாற்றாம் செய்து கொண்டு தான் தங்கிய இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டும், திருடிய பொருட்களை விற்றும் உல்லாசமாக இருந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி தருமபுரி காவல் துறையினர் தெலுங்கானாவில் வைத்து நரசிம்மனை கைது செய்தனர். அவரிடம் இருந்து பள்ளி மாணவியையும் குழந்தையையும் பத்திரமாக மீட்டு மாணவியின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து இன்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவையடுத்து பள்ளி மாணவியை கடத்திய வழக்கில் நரசிம்மனை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் மாவட்ட மத்திய சிறையில் அடைத்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.