தமிழகம்

14 வயது சிறுமியை கேலி செய்த போதை இளைஞர்.. தட்டிக் கேட்ட தந்தைக்கு காத்திருந்த ஷாக்!

14 வயது மகளை கேலி கிண்டல் செய்தவரை தட்டிக் கேட்ட தந்தைக்கு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வீராணம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் பொப்பன் என்ற சின்னராஜ் (48).

இவரது மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவரை அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினரான ராஜபெருமாள் மகன் முருகன் என்ற சண்முகம் (21) என்பவர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து முருகன் தன்னை கிண்டல் செய்வதாக ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி அவரது பாட்டியிடம் தெரிவித்துள்ளார்

இதையும் படியுங்க: தமிழ்நாட்டில் 3வது மூன்றெழுத்து முதலமைச்சர்.. த.வெ.க மாநாட்டிற்காக ஒட்டப்பட்ட போஸ்டர்..!!

அவரது பாட்டி ஒப்பனிடம் தெரிவிக்கவே அவர் நேற்று மாலை வீராணம்பட்டி விலக்கு சாலையில் உள்ள தேநீர் கடை அருகே முருகனை அழைத்து தனது மகளை கிண்டல் செய்யக்கூடாது என்று கண்டித்துள்ளார்.

அப்போது முருகன் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பொப்பன் கண்டிக்கும் பொழுது அவருக்கும் முருகனுக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த முருகன் வீட்டிற்கு சென்று கத்தி எடுத்து வந்து பொப்பனை வயிற்றில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த பொப்பனை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே பொப்பன் உயிரிழந்து விட்டதாக கூறியதால் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலைக்கு முக்கிய காரணம் அப்பகுதியில் அதிகளவில் கஞ்சா மற்றும் மது பொருட்கள் புலங்குவதே காரணம் எனப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என அப்போது மக்கள் தெரிவித்துள்ளனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.