திருவள்ளூர் ; திருவள்ளூர் அருகே சிறுமியை காதலித்து ஏமாற்றி அழைத்துச் சென்று மது போதையில் கழுத்தை நெரித்து கொலை செய்து ஏரியில் வீசிய சம்பவத்தில் காதலன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பூவலம்பேடு அருகே கொல்லானூர் ஏரியில் நேற்று முன்தினம் சடலமாக சிறுமி ஒருவரது உடல் இருப்பதாக பாதிரிவேடு காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில், 15 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடலை மீட்டு சந்தேகத்தின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், உயிரிழந்த சிறுமி நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த திலகா என்பவரது 15 வயது மகள் என அவரது உடல் அடையாளம் தெரிந்தது. கடந்த 18ம் தேதி உஷா வீட்டில் இருந்து மாயமாகிய நிலையில், இது குறித்து பெற்றோர் புகார் அளித்திருந்த நிலையில், ஏரியில் சடலமாக கிடந்தார்.
சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், சிறுமியை அவரது காதலன் முக்கரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த
பிரவீன் மற்றும் ரஞ்சித் இருவரும் அழைத்துச் சென்று மதுபோதையில் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்து ஏரியில் வீசியது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து பாதிரிவேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறுமியை காதலித்து ஏமாற்றி அழைத்து வந்து மது போதையில் கழுத்தை நெரித்து கொலை செய்து ஏரியில் வீசி விட்டு சிறுமி ஏரியில் மூழ்கி உயிரிழந்ததைப் போன்று தற்கொலையாக மாற்றி கொலையை மறைக்க முயன்ற பிரவீன் மற்றும் ஜெகன் இருவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
This website uses cookies.