சென்னையில், 16 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம் பிடித்த நிலையில், அச்சிறுமிக்கு ஏற்கனவே குழந்தை உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னை: சென்னை, பெரம்பூர் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் 34 வயது பெண். இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு 16 வயதில் மகள் உள்ளார். மேலும், இவர் பாரிமுனையில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வருகிறார்.
இதனிடையே, சிறுமி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக கணவரைப் பிரிந்து, தனது பெற்றோருடன் சிறுமி வசித்து வந்தார்.
அப்போது, சதீஷ்குமார் என்ற இளைஞர் உடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதன்படி, கடந்த ஜனவரி 3ஆம் தேதி சதீஷ்குமார் உடன் சிறுமி சென்றுள்ளார். இந்தப் புகாரின் பேரில், போலீசார் நேற்று முன்தினம் திருவாலங்காடு பகுதியில் தங்கியிருந்த சிறுமி மற்றும் ஓட்டேரியைச் சேர்ந்த டேனி என்கிற சதீஷ்குமாரை (19) பிடித்தனர்.
பின்னர், சிறுமியை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், சிறுமி 2 வருடத்திற்கு முன்பு பிரகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தபோது கர்ப்பமாக இருந்த காலத்தில், மருத்துவமனையில் போலியான வேறு ஒரு நபரின் ஆதார் கார்டைக் கொடுத்து, வயதை மறைத்து குழந்தை பெற்றுக் கொண்டதும், அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, தற்போது சதீஷ்குமாரை காதலித்துச் சென்றதும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: 2 மனைவி இருந்தும் நடிகை சுவலட்சுமிக்கு காதல் வலை வீசிய பிரபல நடிகர்.. பதிலடி கொடுத்த நடிகை!
இதனையடுத்து, சிறுமியின் கணவர் பிரகாஷ் மற்றும்காதலன் சதீஷ்குமார் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.