திண்டுக்கல் அருகே பதினேழு வயது மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட கச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு ஆர்த்தி என்ற 17 வயது மகள் உள்ளார். பள்ளிப்படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டு வீட்டில் இருந்துள்ளார்.
இவரது தந்தை குப்புசாமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதனால், இவரது தாயார் நடத்தை சரி இல்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக வீட்டில் தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்துள்ளது.
நேற்று இரவு வீட்டில் படுக்கச் சென்ற மாணவி ஆர்த்தி வீட்டில் தூக்கிட்டு இறந்ததாக அவரது தாயார் கூறியதை அடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விட்டனர்.
மேலும், 17 வயது மாணவி எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்..? இறப்பில் எதுவும் மர்மம் உள்ளதா என்பது குறித்து நிலக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.