திண்டுக்கல் அருகே பதினேழு வயது மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட கச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு ஆர்த்தி என்ற 17 வயது மகள் உள்ளார். பள்ளிப்படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டு வீட்டில் இருந்துள்ளார்.
இவரது தந்தை குப்புசாமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதனால், இவரது தாயார் நடத்தை சரி இல்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக வீட்டில் தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்துள்ளது.
நேற்று இரவு வீட்டில் படுக்கச் சென்ற மாணவி ஆர்த்தி வீட்டில் தூக்கிட்டு இறந்ததாக அவரது தாயார் கூறியதை அடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விட்டனர்.
மேலும், 17 வயது மாணவி எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்..? இறப்பில் எதுவும் மர்மம் உள்ளதா என்பது குறித்து நிலக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது”…
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
This website uses cookies.