தமிழகம்

உயிரைப் பறித்த ஆன்லைன் டயட் டிப்ஸ்.. கேரளா பெண்ணுக்கு சோகம்!

கேரளா, கண்ணூரில் யூடியூபில் உடல் எடையைக் குறைக்க டிப்ஸ் பார்த்து ஃபாலோ செய்த இளம்பெண் உயிரிழந்துள்ளதால் சோகம் ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநந்தா (18). இவரது உடல் எடை அண்மைக் காலங்களில் அதிகாித்ததாகச் சொல்லப்படுகிறது. எனவே, அவர் தனது உடல் எடையைக் குறைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் தொடர்ந்து யூடியூப் வீடியோக்களைப் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அவர் இது தொடர்பான வீடியோக்களை தேடி, அதில் கூறுவது போன்றே உணவுப் பழக்கத்தை மாற்றி உள்ளதாகவும் தெரிகிறது. அதேநேரம், உடல் எடை குறைப்பு தொடர்பாக எந்தவொரு மருத்துவரையும் ஸ்ரீநந்தா அணுகவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

மேலும், இவர் கடந்த ஆறு மாதங்களாக தண்ணீர் வகை உணவுகளையே எடுத்து வந்துள்ளார். இதனையடுத்து, அவரது உடல் எடை வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையில், ஸ்ரீநந்தாவுக்கு திடீர் உடல் நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அவரது உடல் நிலை மிகவும் மோசமாகியுள்ளது.

இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர், அவரை கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீநந்தா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதையும் படிங்க: அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

மேலும், இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “ஸ்ரீநந்தா தொடர்ந்து உடல் எடையைக் குறைக்க குறைந்த அளவு உணவு சாப்பிட்டு டயட் கன்ட்ரோல் செய்து வந்ததால் குடல் சுறுங்கியுள்ளது. இதன் காரணமாக ஸ்ரீநந்தா உயிரிழந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.